சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, டிச.8ம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு நடைபெறும்; மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும்.டிசம்பர் 8ல் இருந்து 12ம் தேதி வரை தொகுதி தொகுதியாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெறும்.டிசம்பர் 8ல் 23,684 பேரும் 9ம் தேதி 21,299 பேரும், 10ம் தேதி 24,710 பேரும், 11ம் தேதி 32,190 பேரும், 12ம் தேதி 36,248 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.