சென்னை: தண்டையார்பேட்டை சாந்தி காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசை படகில்,காசிமேடு நேதாஜி நகரை சேர்ந்த விசைப்படகு ஓட்டுநர் பிரபு, முனியப்பன், ஜெயராமன், மணி, குமார், தியாகு, தனசேகர், வடிவேல், நாகராஜ் உள்ளிட்ட 9 மீனவர்கள், கடந்த 26ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 30ம்தேதி ஆந்திர மாநிலம், நிஜாம் பட்டினம் அருகே மீன்பிடித்த போது, விசைப்படகில் ஓட்டை விழுந்து, 3 நாளாக தண்ணீரில் தத்தளித்தனர்.