மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது.