சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேட்டியளித்தார். மேல்முறையீடு செய்யும் வரை மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறினார். இடஒதுக்கீடு கொடுப்பதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன எனவும் கூறினார். சாதிவாரியான கணகெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என தெரிவித்தார்.