வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து சின்ன வேப்பம்பட்டு நோக்கி, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் முரளிதரன் என்பவர் பைக்கில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரது பைக்கை நிறுத்த முயன்றனர். ஆனால், முரளிதரன் வேகமாக சென்று மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, திரும்பி அதே இடத்துக்கு வந்தார்.
வாகனத்தின் ஆவணங்களை எஸ்ஐ குணசேகரனிடம் காண்பித்து, அவர் ஆய்வு செய்வதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.