தாம்பரம்: ஓஎம்ஆர் சாலையிருந்து, நேற்று அதிகாலை, தாம்பரம் நோக்கி, விஷ்ணு (28) என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் 2 பேர் இருந்தனர். இரும்புலியூர் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரின் இன்ஜினில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. உடனே காரை நிறுத்திவிட்டு மூவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.