டெல்லி: இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர் 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணி இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்று தனது இல்லத்தில் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.