திருவள்ளூர்: சென்னை வட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செந்தில் திருவள்ளூர் கோட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை பணிகள், சாலைகளின் தரம், பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.