உடுமலை அருகே சிவப்பு கலரில் வரும் குடிநீர்

உடுமலை: குடிமங்கலம் ஒன்றியம் கோட்டமங்கலம் ஊராட்சியில் வரதராஜபுரம் கிராமத்தில் 500 வீடுகள் உள்ளன. இங்குள்ள 2 வீடுகளுக்கு விநியோகிக்கும் குடிநீர் சிவப்பு கலரில் வருகிறது. சாயம் கலந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதனால் உடல்நலனுக்கு தீங்கு ஏற்படலாம் என்பதால் உடனடியாக காரணத்தை கண்டறிந்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: