காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் இல்ல திருமணம்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆர்.ஆர்.ஜெயராம் மார்தாண்டன் மகன் ஆர்.ஆர்.ஜெ.தருண் - எஸ்.ஜனனி ஆகியோரின் திருமணம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடந்தது. விழாவில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்பு   செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதுபோல் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, அரவிந்த் ரமேஷ், பல்லாவரம் இ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராஹிம், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார்,

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், பாலவாக்கம் சோமு, ஆர்.டி.பூபாலன், கீதா, ஆனந்தன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர்கள் தி.எழிலரசு, இரா.பாஸ்கரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் கிரிஜா பெருமாள், ரத்னா லோகேஷ்வரன் மற்றும் இ.எஸ்.பாபு, ஏ.ராமு, சங்கர், காங்கிரஸ் சார்பில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், ஐயம்பெருமாள், ஆலந்தூர் கிழக்குப்பகுதி அதிமுக செயலாளர் பரணிபிரசாத், தேமுதிக செயலாளர் பி.கே.நாராயணன், செல்வ ஜோதிலிங்கம், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், வியாபாரிகள் சங்கத்தலைவர் அரிகிருஷ்ணன் உட்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: