நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூரில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தார்சாலை இருபக்கத்திலும் சிமெண்ட் கலவையுடன் கூடிய கருங்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.இதில் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகள், சாலை விரிவாக்கப் பணி, செய்பவர்கள், சரியான முறையில் பணி மேற்கொள்ளாமல், வழிகாட்டி பலகைகளை, சேதப்படுத்தி, அப்புறப்படுத்தியுள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட வழிகாட்டி பலகைகள், சாலையோரத்தில் கிடக்கும், அவலம் கண்டு பொதுமக்கள், வேதனையடைந்துள்ளனர். சன்னாநல்லூரில் மூன்று சாலைகள் பிரியும் இடத்தில், இரண்டுவிதமான வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டன. ஒன்று திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலுக்கு செல்லும் வழி என்று பெயர் குறிப்பிடப்பட்டு, அதன் தூரத்தையும் அதில் குறிக்கப்பட்டிருந்தது.