மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கு.: 19 குற்றவாளிகளையும் நவ.10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம்அக்ரம். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளராகவும், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் அங்குள்ள மசூதியில் தொழுகை முடித்து விட்டு, தனது 7 வயது மகனுடன் வீடு திரும்பியபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை மகன் கண்முன்னே வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகளில் சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டும், சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: