தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கடற்கரையில் அலையாத்தி மரக்கன்றுகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. அவற்றை எடுத்து ஆறு மற்றும் கடல் ஓரங்களில் நடவு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடற்கரை மற்றும் ஆறு ஓரங்களில் அலையாத்தி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து கரையில் மண் அரிப்பை தடுப்பதோடு அரணாக இருந்து பாதுகாக்கிறது. நேற்று தரங்கம்பாடி அருகே உள்ள சின்னூர்பேட்டை கடற்கரையில் ஏராளமான அலையாத்தி மரக்கன்றுகள் கரையில் ஒதுங்கி கிடக்கின்றன.