கடத்தூர் பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்-விவசாயிகள் வேதனை

கடத்தூர் : கடத்தூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடத்தூர், நத்தமேடு, தாளநத்தம், ராமியணஅள்ளி, சிந்தல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மக்காசோள கதிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

இதனால் விவசாயிகளுகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்துறை அதிகாரிகள் படைப்புழு தாக்குதலால் சேதமடைந்த மக்காசோளப்பயிர்களை ஆய்வு செய்து, தடுப்பு முறைகளை மேற்ெகாள்ள உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: