புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் வழக்கறிஞர் முத்தழகியிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. கணவருடன் சாலையில் நின்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் நகையை பறித்து தப்பியதாக கூறப்படுகிறது. பெண் வழக்கறிஞரிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை கிருமாம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.