சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறிய, மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளரை சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியச்செயலாளர் எண்டத்தூர் வி.தரன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.