ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே எசனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது ஆற்றின் தென்புறம் வெள்ளநீர் பெருகி ஆற்றின் பக்கவாட்டு கரைகள் பலவீனம் அடைந்தது. இதனால் விவசாயிகள் நிலங்களில் மணல் குவியல்கள் ஏற்பட்டு 170 ஏக்கர் விவசாய விலை நிலங்கள் பயிர் செய்ய இயலாதவகையில் மாறி உள்ளது. மேலும் வெள்ளத்தின்போது பயிர்கள், மின்மோட்டார்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ஆனால் இதற்கு அரசு இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது ஆற்றின் போக்குமாறி தென்புறம் வழியே மழைநீர் செல்கிறது. இதனால் விவசாய விலை நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது.