தேனி: மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின்வயர்களை தொட வேண்டாம் என மின்வாரியத் துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய சின்னமனூர் செயற்பொறியாளர் ரமேசுகுமார் கூறியதாவது: மின்விபத்துக்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மின்விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கைகள் மின்வாரியத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளும் சேதமடைய வாய்ப்புள்ளது.