பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் வலைகட்டும்போது மீனவர் சேற்றில் சிக்கி இறந்தார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு காட்டுப்பள்ளி முதல் ஆந்திரமாநிலம் ஹரிகோட்டா வரை ஏரியை ஒட்டியுள்ள மீனவ கிராம மக்கள் மீன்பிடித்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஆண்டிக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த ரமணா (45) என்ற மீனவர் நேற்று முன்தினம் இரவு பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.