சுகாதார இயக்குநர் வீட்டில் மேலும் ரூ.3.22 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் பழனி வீட்டில் நடந்த சோதனையில் மேலும் ரூ.3.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழனி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் பழனியிடம் இருந்து ஏற்கனவே ரூ.1.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: