சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கேளம்பாக்கத்தில் தான் நடத்தும் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது சிவசங்கர் பாபா மீதான புகாராகும். இது தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஜூன் 16ம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.