திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீமஹாவல்லப கணபதி ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை 5ம் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சங்கல்பம், விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹ வாசனம், அங்குரார்பணமும், அக்னி பிரதிஷ்டை மற்றும் மாலை மாற்றலும் நடைபெற்றது.