கொடைக்கானல்: பூஜை திருவிழா தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் கொடைக்கானல் ஸ்தம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக, கடந்த 3 நாட்களுக்காக சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நகர் பகுதி நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அனைத்து சுற்றுலா இடங்களிலும் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரி பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் அலைமோதினர்.