சென்னை: உலக பார்வை தினம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடைபெற்ற உலக பார்வை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்களை பாதுகாக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்னென்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையின் வெளியே ‘உங்களின் கண்களை நேசியுங்கள்’ என்ற கோட்பாட்டுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.