சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார்.