சென்னை: வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுவரும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 மிமீ மழை பெய்துள்ளது. ராசிபுரம், செங்கல்பட்டு 70மிமீ, தாமரைப்பாக்கம், சீர்காழி, கொரட்டூர் 60 மிமீ, மழை பெய்துள்ளது. இதையடுத்து வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இதே நிலையில் 17ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்.