கவர்னருடன் இன்று மாலை அண்ணாமலை சந்திப்பு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை 5 மணியளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்து ேபசுகிறார். அவருடன் பாஜக துணை தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்ட பாஜக முன்னணி நிர்வாகிகள் செல்ல உள்ளனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கோயில், சர்ச், பள்ளிவாசல்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது விஜயதசமி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வர உள்ளது. இந்த நேரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாகவும் கவர்னரிடம் அவர்கள் முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் சந்திப்பின் போது பேசப்படும் என்று தெரிகிறது. ”திடீரென” பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக கவர்னரை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: