பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பழநி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் உரங்கள் கொண்டு வரப்பட்டன.