அருளானந்தம் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மீனவர்களின் உரிமைகளுக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், மீனவ சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: