சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 24 ஆண் குழந்தைகளும், 25 பெண் குழந்தைகளும் எந்த அனுமதியும் பெறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தை மூட அம்பத்தூர் தாசில்தார் கடந்த 2015 ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், அம்பத்தூர் தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.