கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை தடுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்ட அறிக்கை: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், வீடுகளை கட்டித்தரும் கட்டுமான நிறுவனங்களின் செலவு குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை  நெறிப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் போன்ற தனியொரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

Related Stories: