சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. சென்னையிலிருந்து ஷீரடிக்கு, தினமும் 3 விமான சேவைகள் இருந்தது. கொரோனா காரணமாக, சென்னை-ஷீரடி விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டன. அவ்வப்போது சிறப்பு தனி விமானங்கள் மட்டும் சென்று வந்தன.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் 2ம் அலை தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் வேகமாக குறைந்து வருவதால், சென்னையிலிருந்து ஷீரடிக்கு, மீண்டும் விமான சேவையை தொடங்க தனியார் விமான நிறுவனத்துக்கு, சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதியளித்தது.