மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர், திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா(43), ஜெயந்தி(40) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க புதுச்சேரியை சேர்ந்த உறவினர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வந்தார். அங்கு இறந்துபோன மேரியின் உடலை வைத்து 2 மகள்களும் ஜெபம் செய்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேரியின் உடலை உடனே அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அவர்கள் தாயை உயிர்ப்பிக்கவைக்க ெஜபம் செய்கிறோம். நீங்கள் வெளியேறுங்கள் என கூறி வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டனர். மீண்டும் இருவரும் ஜெபத்தை தொடர்ந்தனர்.