சென்னை: சென்னையில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம், 2வது தளத்தில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் மன அழுத்ததிற்குள்ளான காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.