பெரணமல்லூர் : வந்தவாசி- ஆரணி சாலை ஆயிலவாடி பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையில் உள்ளது பெரணமல்லூர். இந்த பகுதி சென்னை, மேல்மருவத்தூர், திண்டிவனம், சென்னை, புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள ஆயிலவாடி பகுதியில் பிரதான சாலையில் சிறுபாலம் (கல்வெர்டு) அமைக்க பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது, அங்கு போதிய விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்தது.