ஐதராபாத்: இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி) சமீபத்திய எண்ணிக்கையை அறிய, நாடு முழுவதும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும்படி ஒன்றிய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு இதை நிராகரித்து வருகிறது. தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவம், ஓபிசி கணக்கெடுப்பை நடத்துவதற்கு கடந்த 5ம் தேதி ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், தெலங்கானா சட்டப் பேரவையில் நேற்று பேசிய முதல்வர் சந்திர சேகர ராவ், ‘‘நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாநில சட்டபேரவைகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.