சென்னை: அதிமுக அரசால் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட, 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக அரசை விமர்சித்ததற்காக பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது சுமார் 100க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டது. அந்த அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் கட்டமாக அதிமுக அரசால் போடப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போடபட்ட அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.