சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முழு நேர பதிவாளராக இருந்த கணேசனுக்கு பிறகு பொறுப்பு பதிவாளர்கள்தான் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கணேசனை தொடர்ந்து, குமார், கருணாமூர்த்தி, ராணி மரிய லியோனி வேதமுத்து ஆகியோர் பொறுப்பு பதிவாளர்களாகவே நியமனம் செய்யப்பட்டனர். கடைசியாக பொறுப்பு பதிவாளராக இருந்த ராணி மரிய லியோனி வேதமுத்து 9ம் தேதி (இன்று) ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய பதிவாளராக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.