மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சர் துணைத் தலைவராக இருக்கும் குழுவில் முதன்மைச் செயலர் உறுப்பினர் செயலராக இருப்பார். ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், ரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி இடம்பெற்றுள்ளனர். 

Related Stories: