சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிமுக கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் ராஜேந்திரபாலாஜி உள்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.