சென்னை: மறைமலைநகர் போர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்டு இந்தியா நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு காரணமாக சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் சாமன்ட் நகர் ஆலைகளை மூடுவதாக அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து மறைமலைநகர் ஆலையில் ஊழியர்கள் வேலை இழப்பதை தடுக்கும் விதமாக வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் டாடா மோட்டார் நிறுவனம் ஆலையை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.