தங்கம் சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தும் வந்தது. இதனால், இது போன்ற நேரத்தில் நகை வாங்கலாமா? என்ற குழப்பமான நிலை தங்கம் நகை வாங்குவோரிடையை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.4,387க்கும், சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு பவுன் ரூ.35,096க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,408க்கும், சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,264க்கும் விற்கப்பட்டது. வரும் நாட்களில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் நகை விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: