சென்னை: பிரதான குழாய்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை சுற்று பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு, நெடுஞ்சாலைத் துறையால் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் சென்னை காவல் ஆணையர் அலுலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.