சென்னை: சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட 2 புதிய போலீஸ் கமிஷனரகங்களுக்கான தலைமையிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனரகத்தை 3ஆக பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில், சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி ஆகிய போலீஸ் கமிஷனரகங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை போலீஸ் கமிஷனராக தற்போதைய கமிஷனர் சங்கர் ஜூவால் தொடர்ந்து செயல்படுவார் என்று உத்தரவிடப்பட்டது. அதேநேரத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி ரவி, ஆவடி போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான அலுவலகங்கள் எங்கே அமைப்பது, அதிகாரிகள் நியமிப்பது, எல்லைகளை வரையறுப்பது ஆகியவை குறித்த ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.