சென்னை: பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்- நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06003) வரும் 13ம் தேதி மற்றும் நவம்பர் 3ம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.