நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹27 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 850 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் பருத்தி ஏலத்தை நடத்தினர்.

இதில் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ₹10069க்கும், குறைந்த பட்சம் ₹6760க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள், பருத்தி விற்பனை நடந்தது.

சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 40 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த சுமார் 10 வியாபாரிகள் வந்தனர். ₹2 லட்சத்திற்கு எள் விற்பனையானது.

சிவப்பு எள் ₹79.20 முதல் 89.70 வரை விற்றது. கருப்பு எள் ₹89.90 முதல் 102.90 வரை விற்றது. 200 மூட்டை பருத்தி ₹4 லட்சத்திற்கு விற்பனையானது. பிடி காட்டன் குவிண்டால் ₹5369 முதல் ₹7879 வரையும், சுரபி ₹7500 முதல் ₹10050 வரையும் விற்பனையானது.

Related Stories: