வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று வியாபாரம் களைகட்டி, கறவை மாடுகள் ₹75 ஆயிரம் வரை விலைபோனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிரபலமான கால்நடை சந்தைகளில் வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நடைபெறும் இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஊரகம், சித்ரதுர்கா, கோலார் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளைகள் என விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர பிராய்லர் கோழிகள், நாட்டுக்கோழிகள், ஆடுகள் போன்றவைகளும் கொண்டு வரப்படுகின்றன.