சிதம்பரம்: உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது ஜாலியான் வாலாபாக் படுகொலையை விட மோசமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார். லக்கிம்புர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயினரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது பஞ்சாபில் ஜாலியான் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது என்றார்.