சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்த நடிகை சமந்தா, நாக சைதன்யா கொடுக்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சம் தொகையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.