சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாளை முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முகவர்கள் வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும், அதிமுகவினர், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு செய்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்திலும், அதேபோன்று கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் வாக்குகளை அளிக்க வேண்டும்.